بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

கீழக்கரையிலிருந்து


>> செவ்வாய், 3 ஜனவரி, 2017

hi

wimmoens.nl/exlinks.php?thick=k1b89vvp06wzr



s.s. bahurudeen

Read more...

Fw: CONDOLENCE

>> வியாழன், 8 ஜனவரி, 2015





Assalamu Alaikkum (WRWB)
In the Name of Allah, The Most Gracious and The Most Merciful. May the peace and the blessings of the Almighty be always on you.
cid:image001.jpg@01C6402C.4C852250
 
IMF - Indian Muslim Forum – Abu Dhabi deeply regrets to announce the sad and sudden demise of
Our beloved Brother B.S.A. Rahman,  In Chennai, Innalillahi Wa Inaa ilaihi Raji'oon!
 
The President, office bearers and all members of IMF share their grief  and pass on their prayers and condolence to the bereaved family.
Pray for him May Allah forgive him and reward him from HIS bountiful mercy and rest his soul in paradise In Shah Allah and give his family
the strength to overcome this bereaved period..... Ameen.
INNA LILLAHI WA INNA ILAYHI RAA-JI-UUN.
Note :
Thanks for Brother Hameed SAC from whom I got this massage.
 
                                       
Wassalam
Mohideen Abdulcader
Abu Dhabi,
Mobile : 00971504441861.

CONFIDENTIALITY NOTICE: The information contained in this electronic message and/or any attachments to this message are intended for the exclusive use of the addressee(s) and may contain proprietary, confidential or privileged information. If you are not the intended recipient, you should not disseminate, distribute, copy or take action in reliance of the contents of this mail, whilst such actions are strictly prohibited and may be unlawful. Please notify the sender immediately and destroy all copies of this message and any attachments. Please note ZADCO reserves the right to monitor all email communications through its networks.

WARNING: Computer viruses can be transmitted via email. The recipient should check this email and any attachments for the presence of viruses. ZADCO accepts no liability for any damage caused by any virus or any other form of malicious codes/software transmitted by this email.


Read more...

ஆர்.எஸ் மடை அருகே கீழக்கரை இளைஞர் மீது தாக்குதல்

>> சனி, 25 பிப்ரவரி, 2012

                                                           தேதி: 23.02.2012

     பெறுநர்

             மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்,

             முதல்வர் அவர்களின் தனிப்பிரிவு

             சட்டப்பேரவை கட்டிடம்,

             சென்னை.


மாண்புமிகு முதல்வர் அவர்களின் பார்வைக்கு!

      

              இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரைக்கு இரவு நேரத்தில் செல்லும் பேரூந்துகளில் பயணம் செய்யும் பள்ளவச்சேரி, திருப்புல்லானி மற்றும் கீழக்கரையை சேர்ந்த இளைஞர்களை R.Sமடை என்ற ஊரை சேர்ந்த சிலர் கூட்டாக தாக்கி காயப்படுத்தி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

              இதன் தொடர்ச்சியாக கடந்த 22 ஆம் தேதி இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வழியாக சாயல்குடிக்கு இரவு 9.30 மணியளவில் சென்று கொண்டிருந்த பேரூந்தை பதினோராம் கழுங்கு சோதனை சாவடியில் 8க்கு மேற்பட்ட சமூக விரோதிகள் வழி மறித்து பேரூந்தில் பயணம் செய்த கீழக்கரையை சேர்ந்த ஒரு அப்பாவி இளைஞரை பேரூந்துக்குள் புகுந்து தாக்கி பேரூந்தில் இருந்து கீழே இழுத்து சென்று சுய நினைவு போகும் வரை கொலைவெறி தாக்குதல் நடத்தி இருக்கின்றார்கள். அந்த நபர் சுய நினைவு இழந்தவுடன் அவரை முட்புதர்கள் நிறைந்த சாலை ஓரத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அந்த வழியாக வாகனத்தில் வந்த கீழக்கரையை சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்ட நபரை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அவசர பிரிவில் சேர்த்துள்ளார். இது சம்மந்தமாக காவல்துறைக்கு புகார் செய்யப்பட்டு அடையாளம் தெரிந்த சில நபர்கள் மீதும் அடையாளம் தெரியாத சில நபர்கள் மீதும் குற்ற வழக்கு பதிவு செய்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமாக இருந்த சமூக விரோதிகள் மீது அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு விடுமோ என அஞ்சவேண்டியுள்ளது. எனவே இப்பகுதியில் குறிப்பாக பதினோராம் கழுங்கு சோதனைச் சாவடி, R.Sமடை பேரூந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் காவலர்களை நிறுத்தி சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க தக்க நடவடிக்கை எடுக்கும் படி எங்கள் கழகம் சார்பாகவும், பொது மக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கின்றோம்.


                       இப்படிக்கு,

                                                              

                                              மக்கள் நல பாதுகாப்பு கழகம்

                                                 முகைதீன் இப்ராகீம்

                                                    நகர் செயலாளர் 

                                      

நகல்:

1)  மரியாதைக்குரிய காவல்துறை தலைவர் அவர்கள்,

  தமிழக காவல்துறை தலைமை அலுவலகம், சென்னை.

2)  மரியாதைக்குரிய காவல்துறை துணைத் தலைவர் அவர்கள்,      தென்மண்டலம், மதுரை.

3)  மரியாதைக்குரிய D.I.G அவர்கள், இராமநாதபுரம்.

4)  மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் அவர்கள், இராமநாதபுரம்.

5)  மரியாதைக்குரிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள், இராமநாதபுரம்




மக்கள் நல பாதுகாப்பு கழகம்

Reg No. 143/2010                          18/127, வள்ளல் சீதக்காதி சாலை

                                                                          கீழக்கரை – 623517.

       இராமநாதபுரம் மாவட்டம்.

Read more...

கிழக்கரை சேர்மன் என்ற இணையதளத்தில் அவதூறு

>> செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

கிழக்கரை சேர்மன் என்ற இணையதளத்தில் ஒருவரை பற்றி அவதுறாக கிசுகிசு பாணியில் ஒரு கட்டுரை என்ற பெயரில் அவருடைய விசுவாசத்தை காட்டி இருக்கிறார் காசுக்காக,பணம் சம்பதிப்பதர்க்காக இணையதளம் தொடங்கிய இவர் இன்னொருவரை பற்றி தவறான தகவல்களை தருகிறார் இவர் குறிப்பிடும் முகைதின் இபுராகிம் யாரிடமும் இவரைப்போல் காசு க்காக கையேந்தி நிற்கவில்லை எந்த சுயநலமும் இல்லாமல் கடந்த பத்து வருடங்களாக மனித உரிமைகள் பாதுகாப்பு கழகம் (மக்கள் நல பாதுகாப்பு கழகம்) என்ற பெயரில் ஊர் நலனுக்காக   பொது சேவை செய்து வருகிறார், சிசனுக்காக பணம் சம்பாதிக்க இணையம் நடத்தும் இவற்றை போல் உள்ளா ஜால்ராக்களுக்கு எப்படி தெரியும்.
மக்கள் நல பாதுகாப்பு கழகம் அலுவலகத்திற்கு சென்று பாருங்கள் எத்தனை நல்ல செயல்களுக்காக மனு போட்டிருக்கிறார் என்று காசுக்காக ஜால்ரா தட்டும் கிழக்கரை சேர்மன் என்ற பெயரில் இணையம் நடத்தும் இவரைப்போல் உள்ள புள்ளருவிகளுக்கு எதிராக இவர் செயல்படுகிறார் அன்ற காரணத்திற்காக அவதுறாக செய்தி வெளியிடுகின்றனர் இவர்களைப்போல் உள்ள சுயநலவாதிகளால் நமது ஊருக்குதான் கேடு இதை மக்கள் சிந்தித்து இந்த பணத்திற்காக தாம்பட்டம் அடிப்பவர்களை நிராகரிக்க வேண்டும்.

Read more...

உள்ளாட்சி அமைப்புகளின் பெண் பிரதிநிதிகளுக்கு...எச்சரிக்கை!கணவர், உறவினர்களை அனுமதிக்க கூடாது என தடை

>> ஞாயிறு, 29 ஜனவரி, 2012




Read more...

பைபிள் இறை வேதமா - விவாதம் குறித்த ஒரு பார்வை

>> செவ்வாய், 24 ஜனவரி, 2012


வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான்.

ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். சாகிர் நாயக் மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை (comparitive study ) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, சாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் comparitive study செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர்.
சாகிர் நாயகின் அமைப்பின் பிரிவுகளில் ஒன்றான IREF அமைப்பின் பொறுப்பாளர் ஒருவருடன் திரு. ஜெர்ரி தாமஸ் விவாதம் ஒன்றையும் நடத்தியுள்ளார்.

இந்த வகையில், தாங்கள் தான் சரியான கொள்கையை கொண்டுள்ளோம் என்றும், இஸ்லாமியர்கள் மத்தியில் மிகப்பெரிய அறிஞராக அவர்கள் எண்ணி வைத்துள்ள சாகிர் நாயகிடமே சவால் விடுத்துள்ளோம் என்றும் இறுமாப்புடன் பிரசாரம் செய்து வந்துள்ளனர் இந்த கூட்டத்தினர்.

கேரளா மாநிலத்தில், அதிகமான திருசபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக்கொள்ளும் இவர்கள், கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை நிகழ்த்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.

எது இறை வேதம் என்கிற தலைப்பில் முதலில் விவாதிப்பது என்று, இவர்கள் இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது. எது இறை வேதம் , குர் ஆனா பைபிளா என்பதை ஒரே தலைப்பாக வைக்காமல், இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.

அந்த அடிப்படையில் , பைபிள் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் வருகிற 28 , 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டை கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில், தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த விதி புதிய ஒன்று என்றாலும், சத்தியத்தை மேலோங்க செய்ய வேண்டும் என்கிற நோக்கில், ஆங்கில புலமை அதிகம் பெற்றிராத தவ்ஹீத் ஜமாத்தினர், அதற்கும் தயாரானார்கள்.

விவாதத்தை குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும் புரியக்கூடிய ஒரு அடிப்படையான விஷயம் - இந்த பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால், அதில் முஸ்லிம்கள் கேள்வி கேட்ககூடியவர்களாகவும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

என்ன காரணதால் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறீர்கள்?
மனித கையாடல் பல, பைபிளில் இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமே, இவைகளுக்கு என்ன பதில்?
இவையெல்லாம் கடவுள் வார்த்தையாக இருக்க முடியுமா?

என்றெல்லாம் முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி, பைபிளை இறை வேதம் தான் என்று நிலைநாட்ட வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றார்ப்போல தான் தலைப்பையும் நாம் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.

ஆனால், இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தே, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானது, முஸ்லிம்களை மட்டுமல்லாது, அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவ பார்வையாளர்களையும் கூட வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

ஏனெனில், இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில், துவக்கம் முதல் இறுதி அமர்வு வரை, இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!

ஒரே ஒரு காரணத்தை கூட சொல்லாமல், இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பது, தங்கள் பரமபிதாவின் நாமத்தை போற்றுவார்கள் என்று யாரை நம்பி அந்த பார்வையாளர்கள் வந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மிகுந்த ஏமாற்றமடைய செய்தது என்பதற்கு, இரண்டாம் நாளில் அவர்கள் அணியில் காலியாகி விட்ட கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது !!

சரி, பைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து விட்டு, பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல், இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையா? அந்த திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள்.
எப்படி?

தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில், பைபிளில் இன்னின்ன வசனங்களில், அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றனவே, இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே, நீங்கள் என்னவென்றால், இதை இறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களே, உங்கள் இறைவன் இவ்வளவு மட்டரகமா? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டது.

இவைகளுக்கு முறையான பதில்களை சொல்லி, இந்த வசனத்தில் நீங்கள் சொல்வது போல இல்லை என்றோ, அல்லது இந்த வசனம் இப்படி தான் சொல்கிறது, அதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி, தங்கள் வேத நூலை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், அதற்க்கெல்லாம் மூச்சு விடாமல், உங்கள் குர்ஆனிலும் தானே விந்து என்கிற வார்த்தை உள்ளது, உங்கள் குர் ஆனிலும் தான் விபச்சாரம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஹதீஸிலும் தானே இப்படி உள்ளது என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர்.

அடப்பாவிகளா! உங்கள் பைபிளில், காம களியாட்டங்கள், பெண்களின் மார்புகளை மாதுளைபழங்கலாக ஒப்பீடு செய்யும் ஒப்பீடுகள், அண்ணன்-தங்கை தகாத உறவு, கள்ளக்காதல் கதைகள் என்று உங்கள் பைபிள் என்பது ஒரு முழு நீள காமக்கதை புத்தகத்தை ஒத்து இருக்கிறதே என்று கேட்டால், அதற்கு பதில் சொல்லி உங்கள் தூய்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், குர் ஆனிலும் தானே விந்து என்று வருகிறது, அதிலும் தானே விபச்சாரம் குறித்து பேசப்படுகிறது என்று சொல்கிறீர்களே, விந்து வந்தால் குளிப்பது கடமை, விந்து வந்தால் சுத்தம் செய்துக்கொள்ளாமல் தொழுகைக்கு வராதீர்கள், விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சொல்வது ஆபாசமா? இப்படி தான் பைபிளிலும் ஆபாசம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோமா?

இதை கேட்டால் அதற்கும் பதில் இல்லை. சமாளித்து சமாளித்து பார்த்து ஒன்றும் வேலைக்காகாது என்றவுடன், குர் ஆனிலும் தானே அடிமைப்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளது என்று அடுத்து சொல்லலாயினர். பைபிளில் இத்தனை வண்டவாளங்கள் இருக்கின்றன என்று குற்றம் சுமத்தி உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு, பதிலை சொல்லாமல், குர் ஆனிலும் தானே இருக்கிறது என்று வறட்டு வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இந்த கிறிஸ்தவர் பாதிரிக்கூட்டம். இவ்வாறு சமாளிப்பீர்கள் என்று தெரிந்தே தான், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்பதை தனி தலைப்பாக விவாதிப்பதற்கு ஏதுவாக அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அந்த விவாதத்தின் போது குர் ஆனை குறித்து கேளுங்கள், இப்போது பைபிளுக்கு பதில் சொல்லுங்கள் என்று ஒரே முடிவுடன் தவ்ஹீத் ஜமாஅத் இருந்தனர்.

இருப்பினும், ஓரிரு ஹதீஸ்களை அவர்களது மனம் போல திரிபு வேலை செய்து, வார்த்தைகளை மாற்றியமைத்து விவாதத்தில் சமர்ப்பித்த போது, வெகுண்டெழுந்த சகோ. பிஜே, இதற்குரிய மூல ஆதாரங்களை தர வேண்டும், இல்லையேல், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார்.

ஹதீஸ் என்று எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு வந்த பாதிரிக்கூட்டம், மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களிடம் இவர்களது திரிபு வேலை எடுபடாது என்று ஆனவுடன் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், சுதாரித்து, நாங்கள் ரஹ்மத் ட்ரஸ்டில் எடுத்தோம் என்று ஒரு ஆதாரத்தை தந்தனர்.

அந்த ஆதாரமாவது உண்மையா என்று பார்த்தல் இல்லை. விடாமல், சகோ. பிஜே, அது ரஹ்மத் ட்ரஸ்டில் இவர்கள் சொல்லும் பாகத்தில் இல்லை - பொய் சொல்கிறார்கள் என்றனர்.

பின்னர், இல்லை, நாங்கள் onlinepj தளத்தில் பார்த்தோம் என்றனர். onlinepj தளத்திலும் அவ்வாறு இல்லை, தற்போது நேரடி ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் இணையதளத்தை திறப்பது முடியாது , ஆகவே உங்களை அடுத்த வார தலைப்பின் போது கவனித்துக்கொள்கிறேன் என்று கூறி, இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சகோ. பிஜே.

அடுத்து, பைபிள் இறை வேதம் தான் என்பதை தாங்கள் வைத்திருக்கிற பைபிளின் மூலமே நிரூபிக்க கடமைப்பட்டவர்கள், அதை செய்யாமல், உங்கள் குர்ஆனில் தவ்ராத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கிறதே, இன்ஜீலை குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே, அவை அனைத்தையும் அல்லாஹ் தான் ஈசா நபிக்கு (ஜீசுஸ்) கொடுத்ததாக சொல்கிறானே, அப்படியானால், இந்த கால பைபிளில் மனித கையாடல் உள்ளது என்று சொல்வது, அல்லாஹ், தவ்ராத்தையும் இன்ஜீலையும் பாதுகாக்கவில்லை என்று தானே ஆகிறது என்று கேள்வி வைத்தனர்.

ஆனால், இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை ! பைபிள் இறை வேதம் தான் என்பதை பைபிளை கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள், அதை கூட குர் ஆனை கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர் என்று ஒரு போடு போட்டார் சகோ. பிஜே.
மேலும், குர்ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலுக்கும் இன்று உங்கள் கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கினார்.

இது உங்கள் சுயக்கருத்து, இதற்க்கான ஆதாரத்தை தர முடியுமா என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கி, எந்த குர் ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே குர் ஆனில் தான், ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான சில அடையாளங்களையும் சொல்லபட்டிருக்கிறது என்றார்.

ஈசா நபிக்கு வழங்கப்பட்ட அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை அல்லாஹ் குர் ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை வாசித்தார் சகோ. பிஜே.
இந்த வசனம், நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால், அந்த கால தவ்ராத், இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பாதிரிகள், மீண்டும் தலைப்பை திசை திருப்பி, சகோ, பிஜே எழுதிய இது தான் பைபிள் நூலில் அது தவறு, இது தவறு என்று சம்மந்தமில்லாமல் பேச துவங்கினர்.

முதல் நாளின் இறுதி அமர்வில், சகோ. அப்பாஸ் அலியும், சகோ. செய்து இப்ராஹீமும் பைபிளில் உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட, மற்றொரு பக்கம், சகோ. கலீல் ரசூல் அவர்கள், பைபிளின் மூலப்ப்ரதிகள் எவ்வாற இருந்தன, ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் அது எவ்வாறு மனித கையாடல்கள் மூலம் திருத்தப்பட்டன, எத்தனை எத்தனை முரண்பாடுகள் தோன்றின என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடனும், மூல பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.

ஏற்கனவே இந்த பாதிரிகள் எதிர்க்கொண்ட விவாதங்களில் இப்படிப்பட்ட வாதங்களை எதிர் கொள்ளாததால், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த ஆழமான ஆதாரங்களை கண்டு குலை நடுங்க துவங்கினர் என்பது, விவாதத்தை கண்டு வந்த அனைவருக்கும் புரிய துவங்கியது .

எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன், இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும், உங்களை விட எல்லாம் மிகப்பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய "பைபிளில் நூறு தவறுகள்" போன்ற நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான் வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்.

சரி, மறுப்பு நூல்களை தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா? அப்படியானால், அந்த நூல்களில் இருந்து வாசித்து எங்களுக்கு மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாத்தினர் கேட்டனர். அதற்கும் பதில் இல்லை!

உங்கள் சுய சிந்தனையை உபயோகித்து தான் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை , குறைந்த பட்சம், வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களில் இருந்தாவது மறுப்பு தர வேண்டியது தானே? அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள் ?, உங்களிடம் மறுப்பு இல்லை ! எந்த முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாக சொல்கிறேர்களோ, அந்த நூலில், நாங்கள் இப்போது காட்டியிருக்கிரோமே, அந்த குற்றச்சாட்டுகள் இல்லை ! அதனால் தான் எங்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதில் இல்லை, என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.

இரண்டாம் நாளின் இறுதியில், சரி, பைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்று நிரூபிக்கவில்லை, நானே same side goal போட்டு, உங்களுக்கு பாயின்ட் எடுத்து தருகிறேன் என்று துவங்கினார் சகோ. பிஜே.

என்ன வித்தியாசமாக சொல்கிறாரே என்று பார்த்தால்,

பைபிளில், எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவர் பூ என்று ஊதினால் மலை பறந்து விடும், கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார், கொடிய விஷயத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்த கொள்வார், என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும். எனக்கு மலையை எல்லாம் இங்கு கொண்டு வர முடியாது - இதோ இந்த பேப்பர் வெயிட் - இதை பூ என்று ஊதி தள்ளி விடுங்கள், நான் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக்கொள்கிறேன் என்றார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், கையோடு ஒரு விஷ பாட்டில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்த சகோ. பிஜே, இதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள் என்றார்.

இந்நேரம் வயிற்ரை கலக்கியிருக்கும் அவர்களுக்கு. ஆத்திரத்தில் எடுத்து குடித்தாலும் குடித்து விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம். ஆனால், அவர்கள் வழக்கம் போல, உங்கள் குர் ஆனிலும் ஹதீஸிலும், நோய் ஏற்பட்டாலோ , எந்த விஷம் உடம்பில் ஏறினாலோ, இந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே , நீங்களே இந்த விஷத்தையும் குடித்து இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டு காட்டுங்கள் என்று திருப்பி கொடுத்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத்தினர், நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோ, அது ஹதீஸ் அல்ல, அது பொய், கட்டுக்கதை ! இதை அடுத்த வார தலைப்பில் கேளுங்கள், அக்கு வேறு ஆணி வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். சரி, இது தான் உங்கள் வாதம் என்றால், நாங்கள் எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ, அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள், பிரச்சனை இல்லை என்றனர் !

இதற்கு பதில் சொன்னவர்கள், பைபிளில், இயேசுவை யாரும் பரீட்சித்து பார்க்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது, ஆகவே நாங்கள் இதை பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.

விடாமல் சுற்றி வளைத்த சகோ. பிஜே, இயேசுவை நாங்கள் பரீட்சிக்கவில்லை, உங்களை தான் பரீட்சிக்கிறோம், இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீஎங்கள் திரித்துள்ளீர்களா என்பதை தான் பரீட்சிக்கிறோம் என்று கூறினார்.

அதோடு, எந்த பைபிள் வசனத்தில், இயேசுவை பரீட்சித்து பார்க்க கூடாது என்று ஏசுவே சொல்கிறாரோ, அதே வசனத்தின் கடைசியில், இயேசு அந்த பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறது என்பதையும் சகோ. பிஜே சுட்டிக்காட்டினார்.

அதாவது, என்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே, அந்த பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று, எங்களை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத்தான் வேண்டும், பைபிளும் அருந்த தான் சொல்கிறது என்று ஒரே போடாக போட்டார் பிஜே.

வெலெவெலெத்துப் போன பாதிரிகூட்டம், செய்வதறியாது திகைத நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது.. இறுதியாக பேசிய சகோ. பிஜே, தலைப்பை நிலைநாட்ட வேண்டி ஒரே ஒரு ஆதாரத்தை கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்க்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது என்றார்.

பைபிளில் உள்ள ஆபாசங்கள் என்றும் முரண்பாடுகள், பொய்கள், கட்டுக்கதைகள் என்றும் எத்தனை விஷயங்களை அள்ளிப்போட்டோம், அவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் உங்கள் குர் ஆனிலும் தானே இப்படி உள்ளது, ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிரீர்களே, குர் ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த வாரம் வாருங்கள், இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்ப்பதை போன்று அன்று நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களை நாங்கள் தருவோம் என்று கூறி முடித்தார்.

ஆங்கிலத்தில் Clean Sweep என்று சொல்கிற அளவிற்கு, முழுமையான வெற்றியை நமக்கு பெற்றுதந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

சகோதரர் நாஷித் அஹமத்

Read more...

அண்ணா ஹசாரே கிராமத்தில்! நேரடி ரிப்போர்ட்!

>> திங்கள், 26 டிசம்பர், 2011


அண்ணா ஹசாரே கிராமத்தில்! நேரடி ரிப்போர்ட்!

அண்ணா ஹசாரே தனது சொந்தக் கிராமமான ராலேகான் சித்தியில் மாபெரும் புரட்சியை சாதித்திருப்பதாக ஒரு பிரமை உருவாக்க்கப்பட்டுள்ளது. அது உண்மையல்ல என்பதை எமது செய்தியாளர்கள் அங்கே சென்று அறியத் தருகிறார்கள்.
கஸ்டு புரட்சி – அண்ணா ஹசாரே கடந்த ஆகஸ்டு மாதம் தில்லி ராம் லீலா மைதானத்தில் நடத்திக் காட்டிய உண்ணாவிரதக் கூத்தினை ஆங்கில ஊடகங்கள் இப்படித்தான் வருணிக்கின்றன. காந்தியத்தை நெம்பித் தூக்கி வந்து இந்திய அரசியல் அரங்கின் மையத்தில் வைத்தார் அண்ணா ஹசாரே என்று அனைத்திந்திய ஊடகங்கள் தொடங்கி இலக்கிய பிரிண்டிங் மிசின் ஜெயமோகன் வரை மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.
பழைய பேப்பர்கடையில் சேர்ந்திருக்கும் சில கோடி டன் அச்சிடப்பட்ட செய்திக்காகிதங்கள், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு கிடைத்த பல கோடி ரூபாய் விளம்பர வருவாய், நாடு தழுவிய அளவில் அதிகரித்த மெழுகுவர்த்தி மற்றும் தேசியக்கொடி உற்பத்தி போன்ற உடனடி விளைவுகளைத் தவிர, மேற்படி புரட்சி சாதித்தது என்னவென்பதை நாம் அறியோம்.
ஊழல் மட்டுமல்ல, விவசாயிகள் தற்கொலை, விவசாய நிலம் பறிப்பு, தனியார்மய தாராளமயக் கொள்ளைகள், சாதிவெறி வன்கொடுமைப் படுகொலைகள், இந்து மதவெறி பாசிசம் போன்ற பல்வேறு பிரச்சினைகளும் இணைந்ததுதான் நமது நாட்டு மக்களின் அரசியல் சமூக வாழ்க்கை. ஹசாரே எனும் மீட்பர் இந்த நாட்டின் மற்றப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் என்ன கருதுகிறார்? குஜராத்தில் மோடி அமல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களும், அவரது ஊழலற்ற ஆட்சியும் தனக்குப் பிடித்திருப்பதாக ஹசாரே சொன்னபோதுதான், ஆர்.எஸ்.எஸ். மண்டைகள் கருப்புத் தொப்பிகள் மட்டுமின்றி காந்தித் தொப்பிகளும் அணியக்கூடும் என்ற உண்மை பலருக்குத் தெரிய வந்தது.
ஹசாரேயின் பேச்சுகளைக் கேட்டு அவரைப் புரிந்து கொள்வதை விட, அவருடைய ஊரைப் பார்த்து, அதிலிருந்து அவரைப் புரிந்து கொள்வது எளிதல்லவா? காந்திய வழிமுறைகளைக் கையாண்டு அந்தக் கிராமத்தையே ஒரு மாதிரி கிராமமாகவும் சொர்க்கபுரியாகவும் மாற்றியிருக்கிறார் அண்ணா ஹசாரே என்றும், ஊழல் ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் அறம் சார்ந்த தகுதியை அதுதான் அவருக்கு வழங்கியிருப்பதாகவும் அவருடைய பிரச்சாரகர்கள்முழங்கி வருவதால், அதைத்தான் பார்த்துவிடுவோமே என்று யாத்திரை கிளம்பினோம்.
பஸ் வசதி இல்லாத ஊரை முற்றுகையிடும் மீடியா கேரவேன்கள்
அண்ணா ஹசாரே டெல்லியிலிருந்து ராலேகான் திரும்பிய ஐந்தாவது நாள், நாங்கள் அங்கே சென்று சேர்ந்தோம். ராலேகான் சித்தி மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டதைச் சேர்ந்த கிராமம். சரியான பேருந்து வசதி இல்லை. இருபத்தோராம் நூற்றாண்டின் காந்திய சொர்க்கம் பற்றி சொன்னவர்கள் எவரும் மேற்படி சொர்க்கத்துக்கு ஒழுங்கான பேருந்து வசதியில்லை என்பதைச் சொல்லவில்லை. கிராமத்தில் கால் வைத்ததும் நாங்கள் கண்டது நேரடி ஒளிபரப்பு வசதிகள் கொண்ட அதிநவீனமான நான்கு மீடியா வேன்களைத்தான். அண்ணா ஹசாரேவின் அங்க அசைவுகள் அனைத்தையும் இந்திய நடுத்தர வர்க்கம் தரிசிக்க உதவும் ஜனநாயகக் கடமையை ஆற்றும் பொருட்டு அவை நின்று கொண்டிருந்தன. உள்ளே வடநாட்டு ஓட்டுநர்களும் செய்தியாளர்களும் சாவகாசமாக பாலிவுட் குத்துப் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஊரின் முகப்பில் ஐந்தாறு கடைகளே இருந்தன. தேநீர்க்கடைக்குச் சென்றோம். உடன் வந்த தோழர் மராத்தியில் தேநீருக்குச் சொல்லிக் கொண்டிருந்தபோது காணக்கூடாத காட்சி ஒன்றைக் கண்டோம். கடையின் முன்னே போடப்பட்டிருந்த பெஞ்சில் ஒரு முதியவர் ரசித்து ரசித்து பீடி இழுத்துக் கொண்டிருந்தார். என்னது..? சொர்க்கத்திலேயே திருட்டு தம்மாஎன்கிற ஆச்சர்யம் தாக்க, எமது புகைப்படக் கலைஞர் கேமராவைப் பிரிக்க ஆரம்பித்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர் சட்டெனச் சுதாரித்து பீடியைத் தூர எரிந்தார். தான் புகைப்பிடித்ததை அண்ணா ஹசாரேவிடம் சொல்லி விடுவீர்களா என்று எங்களை அச்சத்தோடு வினவினார். இல்லையென்று சமாதானப்படுத்தினோம். "இந்த கிராமத்தில் புகைப்பழக்கமோ குடிப்பழக்கமோ இல்லை; அவற்றை விற்பதும் இல்லையென்று சொன்னார்களே..?" என்று நாங்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமலேயே இடத்தைக் காலி செய்தார். 'நிம்மதியா ஒரு பீடி இழுக்க முடியாமல்' கெடுத்துவிட்ட எங்களை அவர் சபித்திருக்கக்கூடும்.
நாங்கள் கடைக்காரரிடம் பேச்சுக் கொடுத்தோம். 'ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வரை வியாபாரம் ஆவதாக' சொன்னார். அதுவும் அண்ணா தொலைகாட்சியில் பிரபலமான பின் நிறைய பேர் கிராமத்துக்கு வருவதாகவும், அதனால்தான் இந்தளவுக்கு வியாபாரம் சூடுபிடித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். அங்கே மக்களின் நலவாழ்வை முன்னிட்டு அண்ணா தடை செய்திருப்பதாக சொல்லப்படும் புகையிலை, சிகரெகட் போன்றவற்றை வெளியாருக்கு தெரியும்படி விற்பதில்லை. உள்ளூர்காரர்களுக்கு மட்டும் மறைவாக விற்பதை புரிந்து கொண்டோம். 'பீடி குடிப்பது பிரச்சினையில்லை; ஆனால், அது வெளியாருக்குத் தெரிந்து குடிப்பதுதான் பிரச்சினை' என்கிற வினோதமான ஒழுக்கநெறியை வியந்து கொண்டே கிராமத் தகவல் மையம் செல்வதற்கான வழியை கடைக்காரரிடம் விசாரித்துக் கொண்டோம்.
ஏற்கனவே தகவல் மையம் நோக்கி கோட்சூட் அணிந்த மாணவர் பட்டாளம் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிகத் துடிப்புடன் காணப்பட்ட ஆஷிஷ் என்கிற மாணவரிடம் பேச்சுக் கொடுத்தோம். தாங்கள் பூனாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் என்றும், எம்.சி.ஏ. படித்துக் கொண்டிருப்பதாகவும், தொழிற்சாலை சுற்றுலாவாக இங்கே வந்திருப்பதாகவும் சொன்னார். தொழிற்சாலைகளே இல்லாத ராலேகான் சித்திக்கு தொழிற்சாலை சுற்றுலாவா? ஆளே இல்லாத டீக்கடையில் யாருக்காக டீ ஆற்ற வந்துள்ளீர்கள் என்று விசாரித்தோம்.
ஒரு குறும்பான புன்னகையுடன் எம்மை நோக்கியவர், "இதெல்லாம் சும்மா தமாஷ் தலிவாஒரு ஜாலி ட்ரிப் அவ்வளவுதான்" என்றார்.
"அண்ணா ஹசாரேவைப் பார்த்தீர்களா?" என்றோம்.
"ஆங்பார்த்தோமேஎங்களுக்கு நிறைய நல்லொழுக்க போதனைகள் எல்லாம் கொடுத்தாரே…"  என்றார்.
"அப்படின்னா நீங்க இன்றிலிருந்து ஒரு காந்தியவாதி ஆகப் போகிறீர்களா?" என்று சிரிக்காமல் கேட்டோம்.
எங்களை முறைத்தவர், "ஆர் யூ க்ரேஸி? இதெல்லாம் சும்மா ஒரு ஜாலி; வந்தமா என்ஜாய் பண்ணமா; போனமான்னு இருக்கணும். ரொம்ப சீரியஸா எடுத்துக்கக் கூடாது" என்று ஒரு வியாக்கியானமும் கொடுத்தார்.
ஆங்கில சானல்களில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை ஆதரித்து மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தியவர்கள், காமெராவின் முன் 'பாரத்மாதா கீ ஜே' என்று கோஷமிட்டவர்கள், இதோ எங்களுடன் பேசும் ஆஷிஷ்.
"சரிஅண்ணா ஹசாரே நடத்திய உண்ணாவிரதம் ஊழலை ஒழித்து விடும் என்று நம்புகிறீர்களா?" என்று கேட்டோம்.
"இல்லை.." என்று சிரித்தார். ஏனென்று கேட்டோம்.
"பாஸ்திஸ் ஈஸ் இண்டியா. நம்ம காலத்துலேன்னு இல்லைங்க; நம்ம பேரன் பேத்தி காலத்திலும் ஊழல் இருக்கும். அப்பவும் ஒரு ஹசாரே வருவார். டி.வி.ல பரபரப்பா வரும். எல்லாம் இப்படியே நடக்கும். ஆனா, ஊழல் மட்டும் ஒழியாது" என்று முடித்தார்.
"அப்படின்னா அண்ணா ஹசாரேவின் போராட்டத்தால் என்னதான் பயன்?" என்றோம்.
"இப்பப் பாருங்க, இவர் ஒரு பெரியாள் ஆகியிருக்கார். அரசியல்வாதிங்க அப்டியே இவரைப் பார்த்து மிரள்றாங்க. இப்படி ஒரு விஷயம் இருக்கணும் பாஸ். அப்பத்தான் சரியா இருக்கும். அரசியல்வாதி இருக்கான், ஊழல் இருக்கு, லஞ்சம் இருக்குஅப்படியே அண்ணாவும் இருந்துட்டுப் போகட்டுமே..?"
இந்த தத்துவத்தை மென்று செரிப்பதற்குள் தகவல் மையம் எதிர்ப்பட்டது. அது மூன்று பெரிய ஹால்களைக் கொண்ட ஒரு கான்க்ரீட் கட்டிடம். உள்ளே அண்ணா ஹசாரே பல்வேறு தலைவர்களோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், ராலேகான் சித்தியில் நடந்துள்ள பணிகளின் புகைப்படங்களும் அழகாக வைக்கப்பட்டிருந்ததன. ஏர் சுமக்கும் விவசாயி, மண்வெட்டி வேலை செய்யும் விவசாயி, கிராம பஞ்சாயத்தின் மாதிரி வடிவம் போன்றவற்றை அழகான பொம்மைகளாக வடித்து வைத்திருந்தனர். ஏசி குளிரூட்டப்பட்ட அறைக்குள் விவசாயம் சிலுசிலுவென்று கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
பொம்மையாகிப் போன விவசாயத்துடன் போட்டோ செஷன் - மீடியா சென்டர் பில்டப்புகள்
வந்திருந்த மாணவர்கள் இந்தப் பொம்மைகளுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினர். விவசாயம் பற்றியும் அதில் மக்கள் எதிர் கொள்ளும் சிக்கல்கள், கடன்கள், தற்கொலைகள், அழிந்துப் போன குடும்பங்கள் என்று எதைப் பற்றியும் கேள்விப்பட்டிராத அவர்கள், ராலேகான் விஜயம் குறித்து பீற்றிக் கொள்ளும் பொருட்டு, தங்கள் வருகையை ஆவணப்படுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டியது அருவருப்பாக இருந்தது.
நாங்கள் தகவல் மையத்தின் பொறுப்பில் இருந்தவரிடம் உரையாடினோம். கிராமத்தில் சுமார் 350 குடும்பங்கள் இருப்பதாகவும், விவசாயமும் விவசாயம் சார்ந்த கூலி வேலைகளுமே பிரதானம் என்றும் குறிப்பிட்டார். கிராமத்தில் தொன்னூறு சதவீதமானவர்கள் கல்வியறிவு பெற்றவர்கள் என்றும் தெரிவித்தார். அருகிலேயே அண்ணா ஹசாரே நிர்மானித்த உறைவிடப் பள்ளி ஒன்று இருப்பதாகவும், ஆண்டுக்கு ரூ.23 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகவும் சொன்னார். காந்திய சொர்க்கத்திலும் காசுக்குத்தான் கல்வி எனும் யதார்த்தம் முகத்திலறைந்தது.
மேற்படிப்பு பற்றி விசாரித்தோம். கிராமத்தில் இருந்து சுமார் பதினைந்து பேர் வரை டாக்டர்களாகி இருக்கிறார்கள் என்றும், இவர்கள் அனைவருமே இடஒதுக்கீட்டில் படித்தவர்கள் என்றும் சொன்னார். குறைந்த மதிப்பெண் பெறும் வசதியான வீட்டுப் பிள்ளைகள் ரூபாய் மூன்று நான்கு லட்சங்கள் கொடுத்து பொறியியல் படிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார். அகில இந்திய மட்டத்தில் லஞ்ச ஊழலை எதிர்த்து வீரச்சமர் புரிந்து கொண்டிருக்கும் அண்ணாவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த "தகுதி"யற்ற மாணவர்கள் பணம் கொடுத்து சீட் வாங்குகிறார்களாம். அண்ணாவின் அகராதிப்படி இது லஞ்ச ஊழலில் சேருமா, கட்டணத்தில் சேருமா அல்லது நன்கொடையா என்று தெரியவில்லை.
அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்புப் போரில் அவரோடு கைகோர்த்து நிற்கும் மேட்டுக்குடி குலக்கொழுந்துகள் பலர் இட ஒதுக்கீடு எதிர்ப்பில் முன்நின்றவர்கள். அவர்கள் எத்தனை பேருக்கு ராலேகான் சித்தியில் இருந்து மருத்துவர்களாகியிருப்பவர் எல்லாம் இடஒதுக்கீட்டின் மூலம் வந்தவர்கள் என்பது தெரிந்திருக்கும்? தொடர்ந்து விவசாய கூலித் தொழிலாளர்கள் பற்றியும் கேட்டோம். குறைவான நிலம் வைத்திருப்பவர்கள் மழையை நம்பித்தான் விவசாயம் செய்து வருகிறார்கள் என்றும், அவர்களே விவசாயக் கூலிகளாகவும் இருப்பதாகச் சொன்னவர், ஆண்களின் கூலி ரூ.200 என்றும் பெண்களின் கூலி ரூ.150 என்றும் தெரிவித்தார் தகவல் மையத்தின் பொறுப்பாளர்.
அதே போல், ராலேகான் சித்தியில், உயர்சாதி மராத்தாக்கள் சிலரிடம் மட்டுமே நிலம் குவிந்திருப்பதும், தலித்துகளான மகர்கள் பெரும்பாலும் நிலமற்றவர்களாக இருப்பதும் தெரியவந்தது. மராத்தாக்களிலேயே சில குடும்பங்களிடம் குறைவாகத்தான் நிலம் இருந்தது. இதுதான் அண்ணா ஹசாரே ராலேகான் சித்தியில் நிலைநாட்டியிருப்பதாகச் சொல்லப்படும் சமத்துவத்தின் உண்மையான யோக்கியதை. 'அண்ணா வருவதற்கு முன் ராலேகான், வந்த பின் ராலேகான்' என்று வருபவர்களுக்கெல்லாம் தகவல் மையத்தில் பிலிம் காட்டுகிறார்கள். ஆனால், ஒரு குழி நிலம் கூட மறுவிநியோகம் செய்யப்படவில்லை என்பதே உண்மை. அண்ணா வருமுன் எப்படி இருந்ததோ அப்படியேதான் உள்ளது நில உடைமை. பல இலட்சங்கள் செலவில் கட்டப்பட்டிருக்கும் தகவல் மையத்தின் பளபளப்பில் உண்மையைக் காண முடியாது என்பதால், ஊருக்குள் இறங்கி நடந்தோம்.
ஞான் தேவ் பாலேகர் என்கிற உள்ளூர் இளைஞர் (மாராத்தா சாதி) எம்மோடு இணைந்து கொண்டார். ராலேகான் சித்தியில் நடக்கும் திருமணங்கள் பற்றி அவரிடம் விசாரித்துக் கொண்டே நடந்தோம். ராலேகானில் திருமணங்கள் எளிமையாக நடக்கும் என்றும், வரதட்சணை வாங்குவதோ கொடுப்பதோ கிடையாது என்றும் பெருமையாகச் சொல்லிக் கொண்டே வந்தார். இதற்கிடையே சாலையின் இடது புறம் மற்ற வீடுகளின் மத்தியில் ஒரு சிதிலமான குடிசை தென்பட்டது.
இது யாருடையது, ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது என்று விசாரித்தோம். "இது மூன்று பெண் குழந்தைகளைப் பெற்ற ஒருவருடைய குடிசை" என்றார்.
"ஏன் இப்படிச் சீரழிந்து கிடக்கிறது?" என்று கேட்டதற்கு, "அதுவா, அவர் மூன்று பெண்களுக்கும் திருமணம் செய்து வைத்ததில் இப்படி ஏழையாகி விட்டார்" என்றார்.
"ராலேகான் சித்தியில் வரதட்சணை கிடையாது, திருமணம் எளிமையாக நடக்கும் என்றெல்லாம் சொன்னீர்களே?" என்று திரும்பவும் கேள்வி எழுப்பினோம்.
"ஆங்அது வந்துவரதட்சணை இல்லைதான்ஆனால், விருப்பப்பட்டு செய்வார்களில்லையா?" என்றவர் எங்கள் பார்வையைத் தவிர்த்துக் கொண்டார்.
'கம்பெல் பண்ணி வாங்குறதில்லை சார். விருப்பப்பட்டு அவங்களா கொடுக்கிறத வாங்கிக்குவோம்' என்று சொல்கிறார்களே, அவர்களெல்லாம் அண்ணாவின் ஜன்லோக்பால் சட்டத்தின்படி ஊழல் பேர்வழிகளா இல்லையா என்ற கேள்வி மனதில் எழுந்தது. நாங்கள் அந்தக் குடிசையில் இருந்த முதியவரிடம் பேச முயற்சித்தோம். "இப்போது நேரமில்லை. வேலைக்குச் செல்ல வேண்டும்" என்று தந்தி வாக்கியங்களில் கத்தரித்தார்.
வரதட்சிணை கொடுத்து போண்டியானவரின் குடிசை
நாங்கள் அந்த சமயத்திலும் அதன் பின்னும் கவனித்த முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால், ராலேகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் ஊரைப்பற்றி ஊடகங்கள் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் குறித்து நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். எனவே, அந்தப் பிம்பத்தைக் குலைக்கும் விதமான பதில்களை அவர்கள் வெளியாரிடம் சொல்வதில்லை. பொதுவாக 'இங்கே எல்லாம் நன்றாகத்தான் உள்ளது' என்பது எந்தக் கேள்விக்கும் தயாரான பதிலாக வருகிறது. குறிப்பான விஷயத்தை நுணுகிக் கேட்டால் ஒன்று தவிர்க்கிறார்கள் அல்லது மழுப்புகிறார்கள்.
இதற்கு சற்று முன்பு மதிய உணவு சமயத்திலும் இதே அனுபவம் ஏற்பட்டிருந்தது. ஜெயமோகன் தனது கட்டுரையொன்றில், இடதுசாரிகள் ராலேகான் சித்தியில் இறைச்சி தடை செய்யப்பட்டிருப்பதாக அவதூறு சொல்வதாகவும், தானே ராலேகானில் குளத்து மீன் சாப்பிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். நாங்கள் மீன் உணவு பற்றி அங்கிருந்த இரண்டு உணவகங்களில் கேட்ட போதும் 'இல்லை' என்கிற மறுப்பு விறைப்பாக வந்தது. ஆனால், காலையில் தேனீர் குடித்த கடையில் மறைவாக மட்டன் மசாலா தொங்கிக் கொண்டிருந்ததை நாங்கள் கவனிக்காமல் இல்லை. மட்டன் மசாலா ஊழலா, அதை மறைப்பது ஊழலா என்பது குறித்து 'அண்ணா'யிசத்தில்தான் விடை தேட வேண்டும்.
ராலேகானில் அண்ணா ஹசாரே ஏற்படுத்தியிருக்கும் நீர்ப்பாசன வசதி பற்றி ஞான்தேவ் வெகு உயர்வாகப் பேசினார். அண்ணா உருவாக்கிய தடுப்பணைகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார பயன்கள் அதிக நிலம் வைத்திருப்பவர்களுக்கே கிடைத்திருப்பதை நேரில் காண முடிந்தது.
சில பணக்கார மராத்தாக்களிடமே பெரும்பாலான நிலம் குவிந்துள்ளது. முற்றிலும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும் கிராமம் என்பதால், நிலமற்றவர்களான தலித் மக்கள், மராத்தா நிலச்சுவான்தார்களைச் சார்ந்தே இருக்கின்றனர். அண்ணாவின் பக்தர்கள் சொல்லும் 'தலித்' மேம்பாடு என்பதன் மெய்யான பொருள் இதுதான்.
இதற்கிடையே கிராமக் கமிட்டியின் உதவித் தலைவர் வீட்டை அடைந்தோம். உள்ளே ஒரு புதிய மாடல் இண்டிகா விஸ்டா கார் நின்று கொண்டிருந்தது. பெரிய முற்றம். அதன் இருபுறமும் தகர ஷெட்டுகள் அமைக்கப்பட்டு சுமார் இருபது ஜெர்சி பசுமாடுகள் நின்று கொண்டிருந்ததன. உதவித் தலைவரின் தாயாரை சந்தித்தோம். வேலைக்கு உள்ளூர்காரர்களை வைத்திருக்கிறீர்களா என்று கேட்டோம். "உள்ளூர்காரர்கள் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை. இங்குள்ளவர்கள் பெரும்பாலும் நகரங்களுக்குக் கூலி வேலைகளுக்குச் சென்று விடுகிறார்கள். இங்கே அக்கம்பக்கத்து கிராமத்தவர்கள்தான் கூலி வேலைக்குக் கிடைக்கிறார்கள்" என்றார். கூலி பற்றி கேட்டதற்கு, வருடத்திற்கு முன்னூறு கிலோ தானியமும் ஐயாயிரம் ரூபாயும் கொடுப்பதாகச் சொன்னார்.
ஞான் தேவிடம் உள்ளூர்காரர்கள் நகரங்களுக்குக் கூலிகளாகச் செல்வது பற்றி விசாரித்தோம். நிலமற்ற ஏழைகளுக்கு உள்ளூர் கூலி கட்டாததால் பெரு நகரங்களில் டிரைவர்களாகவோ, சித்தாள்களாகவோ அல்லது அது போன்ற வேலைகளுக்கோ சென்று விடுவதாகச் சொன்னார். அவர் சொன்ன விவரங்களில் இருந்து தமிழகத்தின் வறண்ட மாவட்டமான தர்மபுரியிலிருக்கும் ஒரு கிராமத்தை விட, ராலேகான் சித்தி எந்த வகையிலும் உயர்ந்ததாகத் தெரியவில்லை
ஞான்தேவிடம் பசுவதை பற்றிக் கேட்டோம். தாங்கள் பசுக்களைக் கொல்வதில்லை என்றும் அதற்கும் அண்ணாவின் வழிகாட்டுதல்கள்தான் காரணமென்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். "அப்படியானால் வயதான பசுக்களை என்ன செய்வீர்கள்?" என்று கேட்டோம். அதற்கு அவர், "அவற்றையெல்லாம் மகர்களிடம் கொடுத்து விடுவோம். அவர்கள் அதை பாரனேரியில் இருக்கும் சந்தையில் அடிமாடாக விற்றுவிடுவார்கள். நமக்கு ஏன் அந்தப் பாவமெல்லாம்?" என்று முடித்தார். ஆதிக்க சாதியினர் அமல்படுத்தும் இந்த 'கொல்லைப்புறக் கொலை வழியை', அதாவது பெஞ்சு கிளார்க் மூலம் லஞ்சம் வாங்கும் புனிதர்களான நீதிபதிகளின் வழியை, அண்ணா ஹசாரேதான் அவர்களுக்கு சொல்லிக்கொடுத்தாராம்.
மெல்ல ஞான்தேவைத் தவிர்த்து விட்டு நாங்கள் மகர் குடியிருப்பை நோக்கிச் சென்றோம். ஊரும் சேரியும் தனித்தனியேதான் இருந்தன. அது நமது கிராமங்களில் இருக்கும் சேரிகளுக்கு எந்தவிதத்திலும் மேம்பட்டதாகத் தெரியவில்லை. அண்ணா, ராலேகானின் தலித்துகளுக்கு மேம்பட்ட ஒரு வாழ்க்கைத் தரத்தை உண்டாக்கித் தந்திருப்பதாகச் சொல்லப்படும் கட்டுக்கதைகளின் உண்மையான யோக்கியதையை அங்கே நேரிடையாகப் பார்த்தோம்.
முதலில் எதிர்பட்ட வீட்டின் வாசலில் முதிய பெண்மணி ஒருவர் அமர்ந்திருந்தார். மெலிந்து சுருங்கிய உடலில் கிழிசலான சாயம் போன புடவை ஒன்றைச் சுற்றியிருந்தார். பூஞ்சையான கண்களில் இலக்கில்லாத பார்வை ஏதோ கேள்வியுடன் எங்களை வெறித்தது. நாங்கள் எங்களை அறிமுகம் செய்து கொண்டு அவரிடம் மெல்ல பேச்சுக் கொடுத்தோம். பொக்கை வாயெங்கும் சிரிப்புடன் எங்களை உள்ளே அழைத்து அமரச் சொன்னார். அவரெதிரே மண்தரையில் நாங்கள் அமர்ந்து கொண்டோம். அவரது பெயர் சவித்ரா சீமா ஜாதவ். கணவர் இறந்து விட்டார். ஒரே மகன். அவரும் வெளியூரில் கூலி வேலைக்குச் செல்வதாக தெரிவித்தார்.
அது பத்துக்குப் பத்து அளவில் ஒரே அறை கொண்ட வீடு. தரை சாணி போட்டு மொழுகப்பட்டிருந்தது. சிதிலமான சுவர்களில் சிமெண்டுப் பூச்சு இல்லை. வீட்டினுள் வறுமை தலைவிரித்தாடியது. ஒரே கட்டில். துருப்பிடித்து இற்றுப் போன நிலையில் ஒரு இரும்பு பீரோ, கீழே விழும் நாளை எதிர்நோக்கி நின்றது. அந்த பீரோவின் கதவு உடைந்து கிடந்தது. உள்ளே வெகு சொற்பமான சாயம் போன துணிமணிகள் நேர்த்தியாக மடித்து அடுக்கப்பட்டிருந்தன. சமையல் பாத்திரங்கள் என்று பார்த்தால் இரண்டு கைவிரல்களின் எண்ணிக்கைக்குள் அடங்கி விடும் அளவுக்கே இருந்தன. அந்த வீட்டுக்கு மின்சார இணைப்பு இல்லை. பக்கத்து வீட்டிலிருந்து ஒயர் இழுத்து ஒரு புகைபடிந்த குண்டு பல்பு போடப்பட்டிருந்தது.
நாங்கள் ஊடகங்களில் ராலேகான் சித்தி பற்றி சொல்லப்படுவதற்கும் இவரது நிலைமைக்கும் உள்ள முரண்பாட்டை விசாரித்தோம். தங்களுக்கு விதிக்கப்பட்டது இவ்வளவு தானென்று சொன்னவர் தங்கள் குடும்பத்திற்கென்று விவசாய நிலம் ஏதுமில்லையென்றும், தனது மகன் கூலி வேலைக்குச் செல்வதாகவும், அதில் ஒரு நாளைக்கு 150 ரூபாய் கிடைக்குமென்றும் குறிப்பிட்டார். தகவல் மையத்தில் 200 ரூபாய் கூலி என்று சொன்னது பச்சைப் பொய்.
தொடர்ந்து பேசியதில் அசைவ உணவுகளை வீட்டில் சமைப்பதில்லையென்றும், வெளியூருக்குச் செல்லும்போது பிள்ளைகள் அசைவம் சாப்பிடுவார்கள் என்றும் சொன்னார். குடியும் கூட அப்படித்தானென்று குறிப்பிட்டார். தனது ஏழ்மை காட்சிப் பொருளாக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. குடும்பத்தின் ஏழ்மையான நிலை பற்றியோ கிராமத்தின் ஏற்றத்தாழ்வான சமூக அமைப்புப் பற்றியோ கேள்விகள் வைத்தபோது நேரிடையாக பதிலளிப்பதையோ எங்கள் முகத்தைப் பார்ப்பதையோ தவிர்த்தார்.
அதே நேரத்தில் அந்த மக்களின் வாழ் நிலைமைகள் பற்றி வெளி உலகத்தில் சொல்லப்படும் கதைகளைக் கேட்ட அவர் முகத்தில் ஆச்சர்யம் தெரிந்தது. அண்ணாவின் சீடர்கள் இணையவெளியெங்கும் இரைத்து வைத்துள்ள ராலேகான் பற்றிய சித்தரிப்புகளில் சிலவற்றை நாங்கள் அவரிடம் சொன்னபோது ஒரு எள்ளல் சிரிப்போடும் பதிலேதும் சொல்லாமலும் கேட்டுக் கொண்டார். நாங்கள் அவரிடம் விடை பெற்ற போதும் அதே சிரிப்போடு எங்களை அவர் வழியனுப்பினார். அந்த எள்ளல் எங்களை நோக்கியதல்ல என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டபோதும், அந்த சிரிப்பை மட்டும் நினைவை விட்டு அகற்ற முடியவில்லை.
நாட்டை காப்பாற்ற கிளம்பியிருக்கும் ஹசாரேவின் கிராமத்தில் துணிகளைக் கூட காப்பாற்ற முடியாத நிலை
அடுத்து மகர் வகுப்பைச் சேர்ந்த யதூ பீமாஜி கெய்க்வாட் என்பவரைச் சந்தித்தோம். இவரது குடும்பத்திடம் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இரண்டு மகன்கள். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளது. மகன்கள் இருவருமே மும்பையில் டிரைவர்களாக இருப்பதாகச் சொன்னார். மும்பையில் வாழ்க்கைச் செலவுகள் அதிகமென்பதால் குடும்பங்களை கிராமத்திலேயே விட்டுச் சென்றிருந்தனர்.
ராலேகான் சித்தியில் விவசாயம் செய்பவர்கள் எல்லாம் சுபீட்சமாக இருப்பதாக பத்திரிகைகளில் சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும் போது உங்கள் பிள்ளைகள் ஏன் வெளியூருக்கு கூலி வேலை செய்யப் போக வேண்டும் என அவரிடம் கேட்டோம். அதற்கு தங்கள் விவசாயத்தில் கிடைக்கும் வருமானம் கைக்கும் வாய்க்குமே போதவில்லையென்றும், நிலத்தை சும்மா போட்டால் வீணாகி விடுமே என்பதால்தான் ஏதோ விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் சொன்னார். மேலும், மூன்று ஏக்கர்கள் என்பதால் கிணற்றுப் பாசனத்துக்கு வசதியில்லை என்றும், நிறைய நிலங்கள் வைத்திருக்கும் மராத்தாக்களுக்கு மட்டும்தான் விவசாயத்தால் ஆதாயம் என்றும் குறிப்பிட்டார்.
பேசிக்கொண்டிருந்த போதே அவரது வீட்டின் முகப்பில் இருந்த விநாயகர் படம் கண்ணில் பட்டது. பௌத்தர்களான அவர்கள் வீட்டில் விநாயகர் படம் இருப்பதைப் பற்றிக் கேட்டபோது, தாங்கள் அசைவம் உட்கொள்வதை நிறுத்திக் கொண்ட பின்னர்தான் அண்ணா ஹசாரேவின் முயற்சிகளால் ஊருக்குள் தடையில்லாமல் நடக்க முடிகிறது என்றும், கோயில்களுக்கும் சரிசமமாக போய் வர முடிகிறது என்றும் சொன்னார்.
தலித் மக்களை அசிங்கமானவர்கள் என்று இழிவுப்படுத்தி, அவர்களை சுத்தப்படுத்தி 'இந்துக்களாக' ஏற்றுக் கொள்ளும் இந்துத்துவ கும்பலின் பார்ப்பனமயமாக்கம் அண்ணா ஹசாரேவால் வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப்பட்டிருந்தது. முன்பொரு காலத்தில் அண்ணா ஹசாரே தங்களின் பகுதிக்குள் வந்து, தங்களது உணவுப் பழக்கங்களை மாற்றுவது பற்றியும், 'சுத்தமாக' இருப்பது பற்றியும் அறிவுரைகள் கூறியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
நாங்கள் அவரிடம், "அதுதான் அண்ணா ஹசாரே சொல்லியபடி நீங்களெல்லாம் சுத்தமானவர்களாகி விட்டீர்களே, இப்போது உங்கள் இளைஞர்களுக்கு மராத்தா பெண்களை மணம் முடித்துக் கொடுக்கிறார்களா?" என்று கேட்டோம். இந்தக் கேள்வியைச் செவிமடுத்த பீமாஜி, ஏதோ காதில் காய்ச்சிய ஈயத்தைக் கொட்டியதைப் போன்றதொரு முகபாவனையைக் காட்டினார். "அப்படியொரு சம்பவமே நடக்காது" என்று அவசரமாகச் சொன்னவர், "அப்படியெல்லாம் உலகத்தில் நடக்குமா?" என எதிர்கேள்வியும் எழுப்பினார்.
அவரோடு மேலும் இது குறித்துப் பேசியதிலிருந்து சாதி மறுப்பு என்பது அவர்களின் கற்பனையில் கூட இது நாள் வரையில் தோன்றியிருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அண்ணா ஹசாரே ராலேகானில் நிலைநாட்டியிருப்பதாகச் சொல்லப்படும் சமத்துவம் என்பது 'நாமெல்லாம் இந்து' என்று ஒடுக்கப்பட்ட சாதியினரிடம் இந்து முன்னணி கூறும் சமத்துவம்தான். இந்த உரிமையற்ற நிலை அங்கே இயல்பாக நிலவுகிறது என்பது மட்டுமல்ல, அந்த இயல்புநிலையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு சிறிய கல் கூட அந்தத் தேங்கிய குளத்தில் விட்டெறியப்படவில்லை.
ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் சொல்வது போல் அது தன்னிறைவு பெற்ற கிராமம் அல்ல. அது ஒரு பச்சைப் பொய். அந்த கிராமத்தின் சாதாரண மக்கள் தங்களின் அடுத்த வேளை உணவுக்கும் கூட நித்தம் நித்தம் போராடத்தான் வேண்டியிருக்கிறது. பிள்ளைகளின் கல்வி குறித்தோ, எதிர்காலம் குறித்தோ, மருத்துவச் செலவுகள் குறித்தோ அவர்களிடம் திட்டங்கள் ஏதுமில்லை.
பீமாஜியிடம் உங்களது பேரக் குழந்தைகளை என்னவாக ஆக்கப் போகிறீர்கள் என்று கேட்டோம். ஒரு பேச்சுக்காவது 'நன்றாகப் படிக்க வைப்போம்' என்றோ, 'நல்ல வேலைகளுக்கு அனுப்புவோம்' என்றோ அவர் கூறவில்லை. "அதை அவர்களின் காலம் தீர்மானிக்கும்" என்றார். நம்பிக்கைகள் வறண்ட பதில்! மேட்டுக்குடி இந்து மனத்தின் கருணை வெள்ளம் பாய்வதற்கு ஒரு தாழ்வான வறண்ட நிலம் தேவை. ராலேகானின் மகர் குடியிருப்புகளில் அதனைக் காண முடிந்தது.
பௌத்தரான பீமாஜியோடு இந்த விவகாரங்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது இந்தியாவின் இசுலாமியர்கள் நினைவுக்கு வந்தார்கள். ஒருவேளை ராலேகான் சித்தி இந்தியாவெங்கும் விரிந்தால் இசுலாமியர்களின் நிலை என்னவாக இருக்கும்? நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது.
குடிப்பவர்களையும், புகைப்பவர்களையும் அண்ணா கட்டி வைத்து சவுக்கால் அடிப்பாராம். பதினெட்டு பட்டி வரையில் சவுக்கை வைத்து சமாளிக்கலாம். அதிகாரம் அதைத்தாண்டி விரியும்போது தண்டனை முறைகள் எப்படி இருக்கும்? அண்ணா முத்தி முதல்வரானால் மோடியா?
நேரம் மாலை நான்கைக் கடந்திருந்தது. மீண்டும் ஊருக்குள் திரும்பினோம். மக்களிடையே ஒரு பரபரப்புத் தோன்றியிருந்தது. இரண்டு ஆம்னி பேருந்துகள் உள்ளே நுழைந்து கொண்டிருந்தன. அதிலிருந்து சில மாணவர்களும், வேறு சிலரும் இறங்கினர். விசாரித்தபோது, பூனாவில் இருந்து வருவதாகவும், மாலை நேரத்தில் அண்ணா ஹசாரே நிகழ்த்தப் போகும் பிரசங்கத்தைக் கேட்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள்.
ராலேகான் சித்தியில் ஒரு சொர்க்கத்தை எதிர்பார்த்து வந்து கடுமையாக ஏமாற்றம் அடைந்திருந்ததால், குறைந்தபட்சம் சொர்க்கத்தின் மூலவரான அண்ணாவையாவது பார்க்கலாமே என்று நினைத்தோம். அதிலும், ஜெயமோகன் உள்ளிட்ட அண்ணா பக்தர்கள் 'அவர் கோயில் திண்ணையில் படுத்துறங்கும் எளியவர்' என்றெல்லாம் ஏகத்துக்கும் அவரது எளிமை குறித்து பல்வேறு பில்டப்புகளைக் கொடுத்திருந்ததால், குறைந்த பட்சம் அந்த எளிமையையாவது தரிசிப்போமே என்று அண்ணா தங்கியிருந்த பத்மாவதி கோயிலுக்குச் சென்றோம்.
சுமார் அரை ஏக்கர் அளவுக்குப் பரந்து விரிந்திருந்தது அந்தக் கோயிலின் சுற்றுச் சுவர். அதன் ஒரு கோடியில் அண்ணா உரையாற்றுவதற்கு ஏதுவாக ஒரு சிறிய மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் வலது பக்கம் நவீன வசதிகள் கொண்ட ஒரு ஒற்றைத்தள கட்டிடம் இருந்தது. அதில்தான் அண்ணா ஹசாரே தங்கியிருந்தார். அக்கம் பக்கத்தில் 'கோயில் திண்ணை' போன்ற அமைப்பு ஏதும் உள்ளதா எனத் தேடினோம். இல்லை. மண்டபத்தின் முன்னே நிறைய விழுதுகள் கொண்ட மிகவும் வயதான பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. வந்திருந்த மாணவர்களும் பிற இளைஞர்களும் அந்த விழுதுகளைப் பிடித்துத் தொங்கி ஆடிக் கொண்டிருந்தனர்.
டைம்ஸ் நவ் வந்திருக்காக, என்டிடீவி வந்திருக்காக, மற்றும் வினவுக்காரவுகளெல்லாம் வந்திருக்காக, வாம்மா மின்னலு
அண்ணா தங்கியிருந்த கட்டிடத்தை எளிதில் யாரும் நெருங்கி விட முடியாதபடிக்கு இரும்புக் கிராதி அமைக்கப்பட்டிருந்தது. வெளியே இருக்கும் கூட்ட எண்ணிக்கையையும் நிலவரத்தையும் அண்ணா ஹசாரேவிடம் உடனுக்குடன் தெரிவிக்க நான்கைந்து வேலையாட்கள் தயாராக இருந்தனர். ஐந்து மணிக்கு அண்ணா ஹசாரே தனது இருப்பிடத்திலிருந்து வெளிப்பட்டார். அவர் தங்கியிருந்த கட்டிடத்திற்கும் மண்டபத்திற்கும் ஒரு பத்தடி தூரம் இருக்கும். அவர் நடந்து வந்த இருபுறமும் மக்கள் வரிசைகட்டி நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். வெளியே திரண்டிருந்த கூட்டத்திலிருந்து 'பாரத் மாதாகீ ஜேய்', 'வந்தே மாதரம்' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. கூட்டத்தின் முன்னே அமர்ந்த அண்ணா ஹசாரே, மராத்தியில் தனது உரையை ஆரம்பித்தார்.
நாங்கள் சுற்றும் முற்றும் பார்த்தோம். வந்திருந்த மக்களில் சாதாரண கிராமத்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. பெரும்பாலும் பூனா, மும்பை போன்ற நகரங்களில் இருந்து வந்திருந்த உயர் நடுத்தர வர்க்கத்தினரே அதிகம் இருந்தனர். நாங்கள் அங்கிருந்து கிளம்பினோம்.
அண்ணா ஹசாரே கொச்சையானதொரு பொருளில் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டும் குறிவைத்து ஊழலைப் பற்றிப் பேசுகிறார். ஊழலின் ஊற்றுக்கண்ணான கார்ப்பரேட் முதலாளிகளைப் பற்றிப் பேசவில்லை; ஊழலைப் பெருகச்செய்த தனியார்மயத்தைப் பற்றிப் பேசவில்லை; தாராளமயம் அழித்த விவசாயத்தைப் பற்றி பேசவில்லை; கார்ப்பரேட் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் விளை நிலங்கள் பற்றி பேசவில்லை; சாதி ஆதிக்கம், தீண்டாமைக் கொலைகள், இந்துமதவெறிபோன்ற எதைப்பற்றியும் பேசவில்லை. அவர் பேசாத விசயங்கள் அனைத்திலும் ஆளும் வர்க்கக் கருத்துகளுடன் அநேகமாக அவர் உடன்படுகிறார். அதனால்தான் ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா, டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஊழல் பெருச்சாளிகளால் அவர் ஸ்பான்சர் செய்யப்படுகிறார். நேரலைத் தொலைக்காட்சியின் செய்தியாளர்கள், சம்பவங்களே இல்லாத அந்தக் கிராமத்தில் அவ்வப்போது புழுதி கிளப்புகிறார்கள்.
மாறிய நிலைமைகளுக்கு ஏற்ப சமூகத்தின் மீது வருண தருமத்தை நிலைநாட்டுகின்ற தனது பாசிச அரசியலுக்கு மிகவும் பொருந்தி வருகிறார் என்பதனால்தான், அண்ணா ஹசாரேயை இலட்சிய மனிதராகவும், அவரது கிராமத்தை இலட்சிய கிராமமாகவும் ஆர்.எஸ்.எஸ். கொண்டாடுகிறது.
இராணுவத்தின் கடை நிலை ஊழியருக்கே உரிய அடிமைப்புத்தியும் முரட்டுத்தனமான ஆதிக்க மனோபாவமும், நிலப்பிரபுத்துவ நாட்டாமைத்தனமும், பார்ப்பன இந்து பண்பாட்டு விழுமியங்களும், கொஞ்சம் அசட்டுத்தனமும் நிறைய தற்பெருமையும் கலந்த அந்த 'நல்லொழுக்கச் சீலரை' தரிசிக்க வந்த இளைஞர்கள் ஏ.சி. பேருந்திலிருந்து இறங்கி, அவசர அவசரமாக பத்மாவதி கோயிலுக்கு ஓடிக் கொண்டிருந்தார்கள்.
______________________________________________________________
-  செய்தியாளர்கள், ராலேகான் சித்தி மராட்டிய மாநிலத்திலிருந்து


வேலையே செய்யாத ஆரம்ப சுகாதார நிலையம்


எல்லோருக்கும் சுகாதார வசதியுடன் ராலேகான் சித்தி



இவர்களைத்தான் பயபக்தியுடன் தினமும் ஹசாரே தரிசனத்துக்காக காத்திருப்பவர்கள் என்று பில்டப்புகிறது ஆங்கில ஊடகம்




நாளுக்கு நாள் கூட்டம் குறையுதே…. மறுபடியும் உண்ணாவிரதம் இருக்கணுமோ


வந்திட்டாருய்யா, வந்திட்டாருய்யா


திருட்டு தம்' திருஸ்தலம்


சைவ' சமையலுக்கு மட்டன் மசாலா


திருட்டு தம் அண்ணாயிஸ்டுகள்


உதவி கிராமத் தலைவரின் வீடு


மெழுவர்த்தி கொளுத்த வச்சிருக்காங்க போல ;-)


சைவக் கிராமத்தின் சைவர்களுக்காக ஸ்பெஷல் 'சைவக்' கறிக் கோழிகள்


மகர் சாதி மூதாட்டி சவித்ரா சீமா ஜாதவ்


சவித்ரா சீமா ஜாதவின் 'வீடு



குடும்பத்தை ராலேகான் சித்தியில் விட்டு மும்பையில் டிரைவராக பிழைப்பவரின் வீடு


மகர் சாதியினரின் சமூதாய நலக் கூடம்


நவீன யுகத்தில் அரதப் பழைய உழவுக் கருவிகள்








அண்ணா ஹசாரே: ஒய் திஸ் கொலவெறி ஜெயமோகன்?

 December 23, 2011 -

இன்று ஹசாரேயை கைவிட்டு விட்டனர் என்று கூட சொல்லமுடியாது. பழைய பில்டப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சிலர் விமரிசனம் வேறு செய்கிறார்கள் என்பதுதான் ஜெமோவின் மனக்குமுறல்


ஒய் திஸ் கொலைவெறிக்கு இணையாக தொலைக்காட்சி ஊடகங்களால் பிரபலப்படுத்தப்பட்ட"சூப் சாங்" அண்ணா ஹசாரே.

ஒய் திஸ் கொலைவெறியை மார்க்கெட் செய்தது சோனி நிறுவனம். அண்ணாவுக்கு டைம்ஸ் நௌ தொலைக்காட்சி. ஏற்கெனவே சோனி நிறுவனம் மார்க்கெட் செய்த பிரபல "சூப் சாங்" ஒன்று உண்டு. அது ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம். அதே போல இந்தியாவின் முதலாளித்துவ ஊடகங்களும் அண்ணாவுக்கு முன்னால் பல பெரியண்ணாக்களை மார்க்கெட் செய்திருக்கின்றன.
ஜெமோ கட்டுரை
கார்ப்பரேட் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படும் சூப் சாங்குகள் வைரல் ஆகப் பரவுவது குறித்து மகிழ்ச்சி கொள்பவர்களுக்கு, அந்தக் காய்ச்சல் கொஞ்சநாளைக்கு அப்புறம் விட்டுவிடும்போது, அதைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். சில மாதங்களுக்கு முன் ஹசாரே எழுச்சியால், "பாரதத்தின்" உடல் கொதித்தை காய்ச்சல் என்று புரிந்து கொள்ளாமல், "உள்ளொளியின் உக்கிரம்" என்று புரிந்து கொண்டவர்களும், காய்ச்சலில் பினாத்தியவற்றை கவிதையெனக் கொண்டாடியவர்களும் உண்டு. அவர்களில் முதல்வர் ஜெயமோகன். ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் இன்றைய (23.12.2011) தினமணி நடுப்பக்க கட்டுரையையும், ஹசாரே குறித்த ஜெயமோகனின் முந்தைய எழுத்துகளையும் பார்க்கவும்.

இன்று ஹசாரேயை கார்ப்பரேட் ஊடகங்கள் கைவிட்டு விட்டன என்று கூட சொல்லமுடியாது. பழைய பில்டப் கொஞ்சம் குறைந்திருக்கிறது. சிலர் விமரிசனம் வேறு செய்கிறார்கள் என்பதுதான் ஜெமோவின் மனக்குமுறல்.
சென்ற முறை கார்ப்பரேட் முதலாளித்துவ ஊடகங்கள் ஹசாரே படத்தை நூறு நாள் ஓட்டியதற்கும், அதனை அரசு அனுமதித்ததற்கும் பல காரணங்கள் உண்டு. அவற்றில் தலையாயது காங்கிரசு அரசின் குறிப்பான ஊழல்களை மறைப்பதற்கு அண்ணாவின் பொதுவானஊழல் ஒழிப்பு உதார் பயன்பட்டது என்பதே. இரண்டாவது காரணம், அண்ணா ஹசாரேயின் இயக்கமென்பது லவ் பெயிலியர் பாய்ஸுக்கான ஒரு சூப் சாங்தான் என்பது ஆளும் வர்க்கத்துக்கும் அரசுக்கும் தெளிவாகத் தெரியும். மூன்றாவது காரணம் கார்ப்பரேட் முதலாளிகளுடனான உறவில் மன்மோகன் சிங்கிடம் நிலவும் "ஆண்மைக்குறைவு".
இத்தகைய "வரலாற்றுக் காரணங்கள்தான்" மைலாப்பூர் மாமியையும், லாஸ் எஞ்செல்ஸ் அம்பியையும், லெட்டர்ஸ் டு எடிட்டர் தாத்தாவையும் ஐ ஆம் அண்ணா என்று பாடவைத்தன. ஹிந்து சம்பிரதாயத்தின் வழிவந்த தீவட்டிகளான ஆர்.எஸ்.எஸ் காரர்கள், கிறித்தவத்துக்கே நெருக்கடி ஏற்படும் அளவுக்கு மெழுகுவர்த்தி கொள்முதல் செய்யவும் வைத்தன.
இப்போது நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது. சரத் பவாருக்கு அறை விழுந்ததும், "சிட்டியிலுள்ள டான்களெல்லாம்" கூடிப் பேசிவிட்டார்கள். "இது நல்லதல்ல. இன்று கன்னத்தில் அறை, நாளை நெற்றிப்பொட்டில் துப்பாக்கி என்று நிலைமை மோசமாகிவிடும்" என்று முதலாளிகள் கவலையுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே, "ஒரு அறைதானா" என்று உளறிவிட்டார் ஹசாரே.
சத்திய சோதனையை தலைக்கு வைத்துப் படுக்கும் அகிம்சாவாதிகளான கார்ப்பரேட் முதலாளிகள் இதைக் கேட்டு அதிர்ந்து விட்டார்கள். காந்தியப் பாதையிலிருந்து ஒரு நூல் வழுவினாலும் தங்களால் ஒப்புக்கொள்ள முடியாது என்பதை அண்ணாவுக்குப் புரிய வைத்து விட்டார்கள். மேலும் கார்ப்பரேட் ஊடகங்களை பணியவைப்பதற்கு எந்தெந்த இடத்தில் ஊசியால் குத்தவேண்டும் என்ற அக்குபஞ்சர் முறைகள் தெரிந்த அதிகாரிகளையும் காங்கிரசு அரசு களத்தில் இறக்கியிருப்பதால் ஊடகங்கள் அடக்கி வாசிக்கின்றன.
இதுதான் விசயம். ஆனால் ஜெயமோகனால் இதை எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?
"பவார் தாக்கப்பட்டபோது அண்ணா பேசிய சொற்களை வைத்து அவருடைய ஆளுமையை அழிக்கிறார்கள். ஊடகங்களும் அரசும் மெல்ல அவதூறு மற்றும் ஆளுமை அழிப்புத் தாக்குதல்களைத் தொடுக்கின்றன. அவர் அறிவுஜீவி அல்ல, எளிய மனிதர். அவருடைய பேச்சு திரிக்கப் படுகிறது" என்று தினமணியில் அரைப்பக்கத்துக்கு கண்ணீர் விட்டிருக்கிறார்.
தற்போது ஊடகங்கள் அண்ணாவின் ஆளுமையை ஏன் அழிக்கின்றன என்று ஆராய்ச்சி செய்யும் ஜெயமோகன், நேற்று இதே ஊடகங்கள் அண்ணா காலைக்கடன் முடிக்கும் காட்சி தவிர அனைத்தையும் ரியாலிடி ஷோவாக லைவ் ரிலே செய்தது ஏன் என்ற விசாரத்தில் ஈடுபட்டாரா தெரியவில்லை.  அண்ணாவை வீழ்த்துவதற்கு முதலாளிகளுக்கும் அறிவுஜிவிகளுக்கும் ஒரு நோக்கம் உண்டென்றால், உயர்த்தியதற்கான நோக்கம் என்ன? கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிடியா?
"அவர் மக்கள் நடுவே இருந்து உருவாகி வந்தவர். அவரது மொழி ராஜதந்திரிகளின் மொழி அல்ல" என்று ஜெத்மலானி போல வாதாடுகிறார் ஜெயமோகன். பவாரை அடித்தவுடன், ஒரு அறைதானா என்று கேட்ட அண்ணா, "அமாய்யா அப்படித்தான் கேட்டேன். அதிலென்ன தப்பு?" என்று சொல்லிவிட்டுப் போகவேண்டியதுதானே. "நான் அப்படி சொல்லவில்லை, இப்படி சொன்னேன்" என்று கோக்கு மாக்கு செய்கிறாரே அது அரசியல்வாதி வேலையில்லாமல் வேறு என்ன?
அண்ணா எப்போதும் தனக்குப் பக்கத்தில் ஒரு தேசியக் கொடி, மற்றும் கிரண்பேடி ஆகிய இரண்டு வஸ்துக்களை வைத்திருக்கிறார். கொடி மீது இதுவரை ஊழல் குற்றச்சாட்டு எதுவும் வரவில்லை. ஆனால் பேடியின் யோக்கிதை சந்தி சிரிக்கிறது. தன் மீது மதிப்பு வைத்து நம்பி அழைத்தவர்களையே, திருட்டு கணக்கு கொடுத்து ஏமாற்றியிருக்கிறார். கேட்டால் "ஊழல் பணத்தை திருப்பிக் கொடுத்துவிடுகிறேன்" என்கிறார். "திருட்டு கண்டுபிடிக்கப்பட்டால், திருப்பிக் கொடுப்பதே தண்டனை" என்று ஜன் லோக் பால் மசோதாவின் எத்தனையாவது ஷரத்து கூறுகிறது? உலகமே காறித்துப்பும் பேடியின் இந்தப் பித்தலாட்டம் இந்த எளிய மக்கள் சேவகருக்கு மட்டும் புரியவில்லையா? ஆ.ராஜாவுக்கு சிறை, கிரண் பேடிக்கு பிராயச்சித்தமா?
தங்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டவுடன், "நாங்கள் பகிரங்க விசாரணைக்குத் தயார். தவறு செய்திருந்தால் எங்களை தூக்கிலிடுங்கள். ஆனால் லோக் பால் மசோதாவைக் காப்பாற்றுங்கள்" என்று உருகினார் கேஜ்ரிவால். கிரண்பேடி எந்த தூக்கில் தொங்குகிறார்? தூக்குதண்டனை, கசையடி முதலான எளிய காந்திய தண்டனை முறைகள் தவிர வேறு எதையும் அறியாத, அண்ணா ஹசாரேயின் முனியாண்டி விலாஸ் மூளைக்குள் இந்தக் கேள்வி எழவே இல்லையா?
"காந்தி காங்கிரசை கலைக்கச்சொன்னார், ராணுவத்தைக் கலைக்கச் சொல்லவில்லை". எனவே அண்ணா காந்தியவாதிதான், முனியாண்டி விலாசும் உடுப்பி ஓட்டல்தான் என்று ஆதாரபூர்வமாக நிறுவுகிறார் ஜெயமோகன். காந்தி பிரிட்டிஷ் ராணுவத்துக்கே ஆள் சேர்த்துக் கொடுத்த மகான். அண்ணாவோ இந்திய ராணுவத்தில் ஒரு சிப்பாயாக இருந்தவர். எனவே அவர் காந்தியவாதியாகத்தான் இருக்க முடியும் என்பதை நாம் மறுக்கவில்லை.
"சிறந்த ஊழலற்ற நிர்வாகம்" என்று மோடிக்கு அவர் தெரிவித்த பாராட்டு, இந்து மதவெறியையோ குஜராத் படுகொலையையோ பெயர் சொல்லிக் கூட கண்டிக்காமல் வழுக்கிய அவரது ராஜதந்திரம், பிறகு குஜராத் ஊழல் மாநிலம் என்று விமரிசனம் செய்து தனது பழைய கூற்றை ரத்து செய்த சாதுர்யம், காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றி பிரசாந்த் பூஷண் கூறிய கருத்தை எதிர்ப்பதில் அண்ணா காட்டிய உறுதி போன்ற பலவற்றுடன், இரண்டு பேருக்கும் வாய் பொக்கை என்ற உண்மையையும் கணக்கில் கொண்டு பார்த்தால் அண்ணா ஹசாரே ஒரு காந்தியவாதிதான். பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர்தான் காந்திக்கு வாய் பொக்கையானது என்பது சிறியதொரு வேறுபாடு. அவ்வளவே.
ஹசாரே ஒரு காந்தியவாதி மட்டுமல்ல, அவர் ஜெபி யின் அவதாரம் என்கிறார் ஜெமோ. இந்திய அரசியலில் தனியாகத் தலையெடுக்க முடியாத ஜனசங்கம், 1970 களில் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் "முழுப்புரட்சி" இயக்கத்துக்குள் நுழைந்து, பாரதிய ஜனதாவாக பரிணாமம் பெற்றது. தற்போது மீண்டும் அதே காங்கிரசு கட்சியின் ஆட்சி. தனியார்மயக் கொள்கைகளாலும், ஊழல்களாலும் நாறிப்போயிருந்த போதிலும், காங்கிரசின் இடத்தைப் பிடிக்கும் வலிமை பாரதிய ஜனதாவுக்கு இல்லை. ராமன் பெயரிலான கோயிலோ, பாலமோ, பை பாஸ் சாலையோ தங்களுக்கு அதிகாரத்தைப் பெற்றுத் தராது என்பதும் நாக்பூரின் சர்சங்சாலக்குகளுக்கு தெரிந்திருக்கிறது. எனவே ஒளிந்து கொள்வதற்கு இன்னொரு ஜெ.பி இருந்தால் நல்லது என்பது அவர்களது வேட்கை.
படுகொலை மூலம் இந்துத்துவத்தின் சோதனைச் சாலையை மோடி உருவாக்கியிருந்தாலும், அந்த வழி அனைத்திந்திய அதிகாரத்தை பெற்றுத்தராது என்பது மோடிக்கே தெரிந்து விட்டது. மேலும், அத்தகைய இந்து கிராமத்தை அகிம்சை வழியில் ராலேகான் சித்தியில் அண்ணா ஏற்கெனவே உருவாக்கி விட்டார். அதனை ஆர்.எஸ்.எஸ் அன்றே அடையாளம் கண்டுவிட்டது. இதுதான் நாம் உருவாக்கவிருக்கும் இந்து ராஷ்டிரத்தின் மாதிரிக் கிராமம் என்ற முடிவுக்கும் வந்து விட்டது.
காந்திய சிந்தனையும் இராணுவ இதயமும் கொண்ட ஒரு மனிதரை ஆர்.எஸ்.எஸ் காரர் என்று நாம் புரிந்து கொள்வதற்கு, அவர் காக்கி டவுசரும் கருப்புக் குல்லாவும் அணிந்திருக்க வேண்டுமா என்ன?
கதர் ஆடையை மீறித் திமிரிக் கொண்டு வெளித்தெரியும் அவரது உடல்மொழியைப் பார்த்தாலே அவர் ஒரு "பாசிஸ்ட் நாட்டாமை" என்பதைப் புரிந்து கொள்ளலாம். அல்லது அவரது புகழ்பாடும் ஜெயமோகனின் எழுத்தைப் படித்து, அதில் வெளிப்படும் பதற்றத்தையும், ஆத்திரத்தையும், அசட்டுத்தனத்தையும் அடையாளம் கண்டால், அதிலிருந்தும் அண்ணா ஹசாரே யார் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போர்டு பவுண்டேசனின் பினாமியான மகசேசே விருது பெற்றவர்கள், உலகவங்கியின் திட்டத்தை வழிமொழிபவர்கள், ஜிண்டால் உள்ளிட்ட கொள்ளைக்கார கார்ப்பரேட்டுகளின் பணத்தில் பொதுவாழ்வை சுத்தம் செய்ய வந்தவர்கள் .. .. என்பன போன்ற புறவயமாகத் தெரியும் உண்மைகளிலிருந்து ஹசாரே யார் என்பதை புரிந்து கொள்வது எளிய மக்களுக்கான வழி. அல்லதுபகிரங்கமாக விவாதித்து முடிவுக்கு வரும் அறிவியல் பூர்வமான வழி.
"இலக்கியம்தான் எனது அரசியல்" என்று தேர்ந்து, அதன் வழியில் தேடிக் கண்டுணரும் அழகியல் உண்மையே அறுதி உண்மை என்று நம்பும் ஆன்மீகவாதிகள், தம் மனச்சாட்சியுடன்அந்தரங்கமாகப் பேசலாம். அல்லது தமது மனச்சாட்சியின் பவுதிக வடிவமான ஜெயமோகனுடனும் பேசலாம்.


நன்றி: வினவு

Read more...

About This Blog

Lorem Ipsum

Our Blogger Templates

  © Free Blogger Templates Skyblue by Ourblogtemplates.com 2008

Back to TOP